அந்தப் படத்துல நடிச்சிருக்கவே கூடாது.. அட்டகத்தி தினேஷுக்கு திடீர்னு என்னாச்சு?
தமிழ் சினிமாவில் அட்டகத்தி படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் தினேஷ். இவரை பா ரஞ்சித் நடிகராக அறிமுகப்படுத்தினார். இந்த படம் பெரிய அளவில் சக்சஸாக ஓடியது. இந்த படத்திற்கு பிறகு தான் அட்டகத்தி தினேஷ் என இவருக்கு பெயர் வந்தது. இந்த படத்திற்குப் பிறகு குக்கூ என்ற படத்தில் நடித்தார்.அதில் கண் தெரியாத ஒரு குருடனாக நடித்திருப்பார் அட்டகத்தி தினேஷ்.
இந்தப் படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல ஒரு வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் விசாரணை படத்தில் நடித்திருப்பார். அட்டகத்தின் தினேஷை பொருத்தவரைக்கும் நடிப்பாற்றல் மிக்க நடிகர். பெரிய பெரிய கமர்சியல் படங்களில் தான் நடிக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் கதைக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரமாக இருந்தால் அது மிகக் குறுகிய பட்ஜெட் உள்ள படமாக இருந்தாலும் தன்னுடைய கதாபாத்திரம் அதில் பேசப்படும் என ஒவ்வொரு படங்களையும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் தினேஷ் .
இந்த நிலையில் தான் அவருடைய நடிப்பில் சமீபத்தில் ரிலீசான திரைப்படம் லப்பர் பந்து. இந்த படத்தில் கெத்து என்ற கதாபாத்திரத்தில் அட்டகத்தி தினேஷ் நடித்திருப்பார். இந்த படமும் பெரிய அளவில் நல்ல ஒரு வரவேற்பை பெற்றது. மிகக் குறுகிய பட்ஜெட்டில் அதிகமான வசூலையும் பெற்றுத் தந்தது ரப்பர் பந்து. இந்த படத்திற்குப் பிறகு அட்டகத்தி தினேஷ் ஆக இருந்தவர் கெத்து தினேசாக மாறினார்
இந்த நிலையில் அட்டகத்தி தினேஷ் ஒரு பேட்டியில் கூறிய செய்தி வைரலாகி வருகின்றது. அந்தப் படத்தில் நான் நடிச்சிருக்கவே கூடாது என மிகவும் வெளிப்படையாக பேசியிருக்கிறார். அது எந்த படம் என்றால் குக்கூ திரைப்படம் தான். அதில் கண் தெரியாமல் படம் முழுக்க ஒரு குருடனாக வலம் வந்திருப்பார் அட்டகத்தி தினேஷ். அதனால் தன் இரு கண்களையும் இரு பக்கமும் குவியும் படி நடித்திருப்பார்.
அதனால் இந்த படத்திற்கு பிறகு 5வருஷம் என் கண் மிகவும் பாதிப்படைந்தது .அதனால் மிகவும் கஷ்டப்பட்டேன். தலைவலி, கண்ணுல அப்பப்போ தண்ணி வந்துட்டே இருக்கும்.இப்போ வரைக்கும் கண்ணுல பிரச்சினை இருக்கு. அவ்வளவு அழுத்தமா பன்ணியிருக்க வேண்டாம்னு நினைக்கிறேன்.இருந்தாலும் சந்தோஷம் தான். சொல்லப்போனால் அந்த படத்தில் நான் நடிச்சிருக்கவே கூடாது என்றெல்லாம் பேசி இருக்கிறார் அட்டகத்தில் தினேஷ்.
பெரிய பெரிய படங்களில் நடிக்க வேண்டும். பெரிய இயக்குனர்களுடன் சேர்ந்து பணிபுரிய வேண்டும் என்ற எண்ணமெல்லாம் இவருக்கு கிடையாது. தன்னுடைய கதாபாத்திரம் எந்த அளவுக்கு அந்த படத்தில் முக்கியத்துவம் பெறுகிறது. நல்ல கதை அம்சம் கொண்ட படமா என்பதை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் தினேஷ்.