பஞ்சாயத்துனு கூட்டிட்டு போய் மிரட்ட.. பிஸ்டல் எடுத்து மாஸ் காட்டிய அஜித்! சும்மாவா?

ajith (3)
தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் அஜித். எப்போதும் அஜித்திற்கு பிடித்தமான மேற்கொள் என்றால் வாழு.. வாழ விடு என்பதுதான். அந்தளவுக்கு இந்த சினிமாவில் இப்படி ஒரு இடத்தை அடைய அவர் பட்ட போராட்டங்கள் ஏராளம். எந்தவொரு சினிமா பின்புலமும் இல்லாமல் தனி ஆளாக இந்த திரைத்துறையில் ஒரு மிகப்பெரிய ஆளுமையாக வளர்ந்து நிற்கிறார் அஜித்.
ரஜினி, கமல் இவர்களுக்கு இணையான அந்தஸ்தை பெற்ற நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார் அஜித். என்னுடைய தோல்விக்கும் நான் மட்டுமே காரணம். ஆனால் என்னுடைய வெற்றிக்கு நான் பட்ட வலிகள்தான் காரணம் என்றும் கூறியிருப்பார் அஜித். அதற்கு ஒரு உதாரணமான சம்பவத்தை பற்றி இப்போது இந்த செய்தியில் பார்க்க இருக்கிறோம்.
அஜித்தை வைத்து பாலா எடுக்க நினைத்த படம் நான் கடவுள் திரைப்படம். ஆர்யாவுக்கு முன் அஜித்தான் அந்தப் படத்தில் நடித்துக் கொண்டிருந்தார். அதற்காக ஒரு கோடி பணமும் அட்வான்ஸாக அஜித்துக்கு கொடுக்கப்பட்டது. ஆனால் பாலா படத்தை ஆரம்பிக்க கொஞ்சம் காலதாமதப்படுத்தியதால் அஜித்தால் மேற்கொண்டு அந்தப் படத்தில் நடிக்க முடியவில்லை.

அதனால் இந்தப் படத்தில் இருந்து விலகிக் கொள்கிறேன் என்று சொல்லியிருக்கிறார். அது சம்பந்தமாக பஞ்சாயத்தும் நடைபெற்றிருக்கிறது. அஜித்திடம் ஒரு கோடி கொடுத்தவர் வட்டியுடன் சேர்த்து மூன்று கோடி கேட்டாராம். இது சம்பந்தமாக சென்னையில் உள்ள ஹோட்டலில் பஞ்சாயத்து நடைபெற்றதாம். அங்கு பாலா, மதுரை அன்பு, மற்றும் சில பேர் சுற்றிக் கொண்டு அஜித்திடம் வாக்கு வாதம் செய்திருக்கின்றனர்.
மிரட்டும் தொணியிலும் பேசினார்களாம். அந்த நேரத்தில் அஜித் அவர் பின் பாக்கெட்டில் இருந்த பிஸ்டலை எடுத்து மேஜை மீது வைத்தாராம். ஆனால் அவர்களை மிரட்டுவதற்காக இல்லையாம். கொஞ்சம் தொந்தரவாக இருக்குதேனு எடுத்து மேஜை மீது வைத்திருக்கிறார். அதைப் பார்த்ததும் எதிரே இருந்தவர்கள் பயத்தில் அடங்கி போனார்களாம். இதை நேரில் பார்த்த ஒரு பிரபலம் தற்போது ஒரு பேட்டியில் கூறி வருகிறார்.