தனுஷ் மீது நயன்தாரா குற்றச்சாட்டு மூன்று வினாடிக்கு 10 கோடி கேட்ட தனுஷ்?

பிரபல இயக்குனர் தயாரிப்பாளரும் மற்றும் சினிமா துறையில் பன்முக திறமையோடு வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் தனுஷின் மீது பிரபல நடிகையும் தயாரிப்பாளருமான நயன்தாரா வெளிப்படையாக ஒரு குற்றச்சாட்டை வைத்துள்ளார்.
இதில் நானும் ரவுடிதான் படத்தில் உள்ள காட்சிகளை Netfiix-இல் வெளியாக இருக்கும் நயன்தாராவின் திருமண ஆவண படமான “நயன்தாரா பீ ஆன் தி ஃபேரி டேல்” இல் உபயோகிக்க அப்படத்தின் தயாரிப்பாளரான தனுஷிடம் கோரிக்கை வைத்ததாகவும் அதற்கு அவர் பதில் அளிக்கவில்லை என குற்றம் சாட்டப்படுகிறது.
நயன்தாராவின் இரண்டு வருட காத்திருப்புக்கு பிறகும் அனுமதி அளிக்கப்படவில்லை. அதில் இருந்து மூன்று வினாடி காட்சிகளை தங்களது படத்திற்கு உபயோகித்ததற்காக ரூபாய் 10 கோடி நஷ்ட ஈடு கேட்டு நடிகர் தனுஷ் நயன்தாரா அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியதற்காக நயன்தாரா இந்த குற்றச்சாட்டை சமூக வலைதளத்தில் கடிதத்தின் மூலம் தெரிவித்துள்ளார்.
நானும் ரவுடிதான்
2015 வெளிவந்த நானும் ரவுடிதான் படத்தின் தயாரிப்பாளர் தனுஷ். இப்படத்தினை எழுதி இயக்கியது நயன்தாராவின் கணவரான விக்னேஷ் சிவன். நானும் ரவுடிதான் படத்தின் போது தான் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது இதனை படத்தில் உபயோகிக்க விக்னேஷ் சிவன் நயன்தாரா தம்பதியினர் தனுஷிடம் அனுமதி கேட்டு இருந்தார்கள். இந்நிலையில் அனுமதி மறுக்கவும் மூன்று வினாடி பாடல்களை மட்டும் தங்களது படத்தின் படத்திற்கான உபயோகப்படுத்திக் கொண்டனர். இதனை பயன்படுத்திதற்காக தனுஷ் நயன்தாரா அவர்களிடம் 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து தங்கள் படத்தில் காட்சிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் தாங்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.
இதனை சட்டரீதியாக எதிர்கொள்வதாக நயன்தாரா தற்போது தெரிவித்துள்ளார். மேலும் தனுஷ் தரப்பிலிருந்து இது குறித்து பதில் அளிக்கபடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது